BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 January 2014

தே.மு.தி.க பொதுக்குழுவில் கொந்தளித்த விஜயகாந்த் மனைவி

அசால்ட்டு காட்டிய அண்ணி, திமுகவுக்கு எதிராக‌ பிரேமலதா காட்டம், டாஸ்மாக்குக்கு எதிராக விஜயகாந்த் கொந்தளிப்பு


வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணிக்கு விஜயகாந்தை இழுக்க திமுக தலைவர் கருணாநிதியே பக்குவமாக விஜயகாந்தை அரவணைத்து பேசிக்கொண்டிருந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
தே.மு.தி.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு எதிராக கொந்தளித்துள்ளார்.

ஒரு 'இத்துபோன'(வடிவேலு) நடிகரை வைத்து கொண்டு, தி.மு.க, விஜயகாந்தை மிக மோசமாக, கொச்சையாக‌ பேசியதாகவும், அப்படி பேசியதை தங்களது தொலைகாட்சியில் ஒளிபரப்பி மகிழ்ந்ததாகவும் பிரேமலதா குற்றம் சாட்டினார்,  மேலும், தி.மு.க தனது ஆட்சி காலத்தில், விஜயகாந்தின் மண்டபத்தை இடித்தது, வருமான வரி சோதனை நடத்தியது போன்று தே.மு.தி.க விற்கு பல நெருக்கடிகள் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் மனதில், தே.மு.தி.க என்றும் நிலைத்து நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்ணி பிரேமலதா திமுகவுக்கு எதிராக கொந்தளித்தால் கேப்டன் விஜயகாந்தோ டாஸ்மாக்குக்கு எதிராக கொந்தளித்தார்.

தமிழக அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏதும் செய்யாமல், மதுபான கடைகளை திறந்து, இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும், பல தாய்மார்களின் வாழ்க்கை பாதிக்க படுகிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறந்தது போதாது என்று, இப்பொழுது பெரிய பெரிய ஷாப்பிங் மாள்களிலும், ஏ.சி வசதிகளுடன் மதுகடைகளை திறந்து இருப்பது கண் டனதிற்கு உரியது என்று தே.மு.தி.க பொதுக்குழுவில் பேசியுள்ளார்.

இதற்கு முன்பு, சமீபத்தில் நடந்த, ஒரு படவிழாவின் போது, விஜயாகாந்த், குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றும், அது பெரிய தப்பா என்றும் பேசியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media