BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 6 January 2014

மு.க. அழகிரி பேட்டி தனக்கு தேவையில்லாத விஷயம்: மு.க. ஸ்டாலின்

அண்ணன் அழகிரி பேட்டி ஒரு தேவையில்லாத விஷயம்,  கடுப்பான தம்பி ஸ்டாலின்

நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் காட்டு காட்டென்று திமுக தலைமையை காட்டிய அழகிரியின் பேட்டி திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, கட்சி தலைமை தன்னை ஒதுக்கிறது, தன் மேல் ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கட்சி எதுவுமே பேசவில்லை என்றெல்லாம் பேட்டி அளித்து ஸ்டாலினின் பிபியை எகிறவைத்தார் அழகிரி.

இந்நிலையில் இன்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், புதிய தலைமுறையில் மு.க.அழகிரியின் பேட்டியை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, தொலைகாட்சிகளிலோ, பத்திரிக்கைகளிலோ வரும் பல தேவையில்லாத விஷயங்களை தான் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை என பதில் அளித்தார்.

மதுரையில் தி.மு.க அமைப்புகள் கலைக்க பட வேண்டும் என்ற முடிவு என்னால் எடுக்கப்பட்டதில்லை என்றும் அது தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொது செயலாளர் அன்பழகன் எடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media