BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 27 January 2014

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்.எல்.ஏ நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, எம்.எல்.ஏ விநோத் குமார் பின்னி, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக‌ நீக்கப் பட்டார். இவர், ஆம் ஆத்மி கட்சியையும், கேஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.  அக்கட்சி, டெல்லி தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,  கேஜ்ரிவால் சர்வாதிகாரம் செலுத்துபவர் என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆம் ஆத்மி அரசை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியிருந்தார்.

இதை பற்றி விநோத் குமார் பின்னி பேசுகையில், "டெல்லி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசிய என்னை, கட்சியை விட்டே நீக்கி இருப்பது துரதிஷ்ட வசமானது. ஆம் ஆத்மி ஒரு சர்வாதிகாரம் நிறைந்த கட்சி, அதனால், என்னை நீக்கியிருக்கும் அவர்களது முடிவில் எனக்கு ஆச்சரியம் இல்லை. " என்று தெரிவித்தார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media