BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 27 January 2014

பிற மொழி படங்கள் டப் செய்யப்பட்டு கன்னடத்தில் வெளியாவதற்கு தடை விதிக்க கோரிக்கை

கன்னட படங்கள் குவிக்கும் வசூலை விட, தமிழில் இருந்து கன்னடத்திற்கு டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்கள் அதிக‌ வசூலை குவிப்பதினால், அதை முடக்குவதற்கு, கன்னட திரையுலகினர் பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று பெங்களூரில் நடந்த கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய அவசர கூட்டத்தில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

எனினும், கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media