BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 27 January 2014

மதுரைக்கு கிளம்பிய அழகிரியை சந்தித்த துரைமுருகன்

திமுக விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நேற்று மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் அழகிரி. சென்னை விமான நிலையத்தில்  மேளதாளம் முழங்க அவரது ஆதரவாளர்கள் தடல் புடலான வழியனுப்பு நடத்தி வைத்தனர். இம்மாதம் 30ம் தேதி, அவர் பிறந்த நாளை, மதுரையில் சிறப்பாக கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் பெரிய திட்டங்களுடன் இருக்கின்றனர். அழகிரியும் அவர் பிறந்தநாள் அன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, விரிவாக பேச போவதாக அறிவித்து இருந்தார்.

அழகிரி கிளம்புவதற்கு முன்பு, விமான நிலையத்திற்கு திடீரென திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். அவர் அழகிரியை சந்தித்து தனியாக பத்து நிமிடங்கள் பேசினார். திமுக தலைமை தரப்பில் துரைமுருகன் மூலம் ஏதாவது சமரசத்திற்கு முயல்கிறார்களா என்ற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் இந்த சந்திப்பு எழுப்பியுள்ளது.

அவர்கள் எதை பற்றி பேசினார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.












Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media