BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 27 January 2014

தி.மு.க பற்றி அக்கறை இல்லை, அக்கட்சி அழிவிற்கு ஒரு காரணம் வீரமணி

தி.மு.க வில் இருந்து கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, நீக்கப்பட்ட அழகிரி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் தேர்தலில், தி.மு.க வெல்வது பற்றியோ, அவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் பற்றியோ எந்த அக்கறையும் தனக்கு கிடையாது என்று கூறினார். ஆனால், நிச்சயமாக, தே.மு.தி.க வுடன் இணைந்தால், எந்த பலனும் தி.மு.க விற்கு கிடைக்காது என கூறினார்.

வீரமணியை பற்றி பேசும் போது, "ஆட்சி மாறும் போதெல்லாம் கருத்து சொல்லும் கறுப்பு மனிதர் அவர். கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றார். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஜெயலலிதாவை சமூக நீதிகாத்த வீராங்கனை என்று சொன்னார். தற்போது, தி.மு.க.வின் அழிவிற்கு அவரும் ஒரு காரணம் ஆகி வருகிறார்." என்று அவரை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், தி.மு.க வில் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள், அவர்கள் கட்சியின் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்கள், அதன் காரணமாகவே தான் நீக்கப்பட்டிருப்பதாகவும் அழகிரி கூறினார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media