காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு முப்பதிற்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றிருந்த படகு நடுக் கடலில் கவிழ்ந்தது. இதில் 31 பேர் உயிர் இழந்தனர். இது வரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள், பெரும்பாலானாவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள். மும்பையைச் சேர்ந்த சிலரும் படகில் இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே ஏற்றலாம். ஆனால், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்ற பட்டதால், படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.