கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அழகிரி நேற்று விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து காத்து கொண்டிருந்தனர். சென்னை விமான நிலையத்திலும், அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் பிரம்மாண்டமான முறையில் வழியனுப்பு நடத்தினர்.
மதுரையில், தனக்காக உற்சாகமாக காத்து கொண்டிருந்த ஆதரவாளர்களை பார்த்து, புன்னகை நிறைந்த முகத்துடன் கைகளை அசைத்தார் அழகிரி. அப்பொழுது, அழகிரி ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரிக்கு, பிரம்மாண்டமான வழியனுப்பு மற்றும் வரவேற்பு நடத்த ஆயிரங்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்தது, திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அழகிரி தன் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று விரிவாக பேச போவதாக கூறியிருப்பது திமுக வட்டாரத்தில், படபடப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் துரைமுருகன் அழகிரியை சென்னையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான துரைமுருகன் அழகிரியை சந்தித்திருப்பது கருணாநிதி அனுப்பிய சமாதான தூது என்றே தெரிகிறது
மதுரையில், தனக்காக உற்சாகமாக காத்து கொண்டிருந்த ஆதரவாளர்களை பார்த்து, புன்னகை நிறைந்த முகத்துடன் கைகளை அசைத்தார் அழகிரி. அப்பொழுது, அழகிரி ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரிக்கு, பிரம்மாண்டமான வழியனுப்பு மற்றும் வரவேற்பு நடத்த ஆயிரங்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்தது, திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அழகிரி தன் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று விரிவாக பேச போவதாக கூறியிருப்பது திமுக வட்டாரத்தில், படபடப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் துரைமுருகன் அழகிரியை சென்னையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான துரைமுருகன் அழகிரியை சந்தித்திருப்பது கருணாநிதி அனுப்பிய சமாதான தூது என்றே தெரிகிறது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.