இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கருணாநிதி, தன்னைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் வெறுக்கத்தக்க வகையில் அழகிரி பேசினார் என்றும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்றும் அழகிரி கூறியதை எப்படி ஒரு தகப்பனார் பொறுத்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த குற்றச்சாட்டிற்கு, பதிலடி கொடுத்திருக்கிறார் அழகிரி.
"என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ", என்று அழகிரி கூறியுள்ளார்.
உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.
"என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ", என்று அழகிரி கூறியுள்ளார்.
உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.