காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் தான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறியிருந்தார். "இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்?" என்று கேட்டிருந்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தான் அச்சப்படவில்லை என்றும் கூறினார். 1984ல் நடந்த சீக்கியர்கள் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டு என்றும், அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு அந்த படுகொலைகளை தடுக்க முயன்றது என்றும், ஆனால் 2002ல் நடந்த கலவரத்தை நிகழ்த்தியதே மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.
"பல மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற போது என்னை குறிப்பிடுவதில்லை. ஆனால் சில மாநிலங்களில் தோற்கும் போது என்னை பொறுப்பாக்குகின்றனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் வெல்லாவிட்டால் நானே முழு பொறுப்பு", என்றும் அப்பேட்டியில் கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரவே, காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு தந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாகவும், 2014 தேர்தலில், காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என்றும் கூறினார், ராகுல் காந்தி.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தான் அச்சப்படவில்லை என்றும் கூறினார். 1984ல் நடந்த சீக்கியர்கள் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டு என்றும், அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு அந்த படுகொலைகளை தடுக்க முயன்றது என்றும், ஆனால் 2002ல் நடந்த கலவரத்தை நிகழ்த்தியதே மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.
"பல மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற போது என்னை குறிப்பிடுவதில்லை. ஆனால் சில மாநிலங்களில் தோற்கும் போது என்னை பொறுப்பாக்குகின்றனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் வெல்லாவிட்டால் நானே முழு பொறுப்பு", என்றும் அப்பேட்டியில் கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரவே, காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு தந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாகவும், 2014 தேர்தலில், காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என்றும் கூறினார், ராகுல் காந்தி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.