ஆம் ஆத்மி கட்சி, ஒரு கோடியே ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் தனது கட்சியினைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 26ம் தேதிக்குள் தங்களது கட்சியில் சுமார் ஒருகோடி உறுப்பினர்களை இணைப்பதை இலக்காகக் கொண்டு செயல் பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 98.46 லட்சமாக இருந்தது. ஏற்கனவே இருந்த பழைய உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து, மொத்தம் ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் கட்சியில் இருப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மியின் தற்போதைய உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப் படுவர் என ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது.
புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் எனவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.