ஆம் ஆத்மி கட்சி, கடமை தவறியதாக கூறி சில காவல் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, டெல்லியில் 30 மணி நேர தர்ணாவில் ஈடுப்பட்டது. பின்னர், துணை நிலை ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என கேஜ்ரிவாலின் போராட்டத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார், டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. "ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், 1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை குடியரசு தலைவர் என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தன் டிவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இப்பதிவிற்கு எதிர்ப்புகள் பல வந்ததாலும், சர்ச்சைக்குள்ளானதாலும், பதிவை சில மணி நேரங்களிலேயே நீக்கி விட்டார் சோம்நாத் பாரதி.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என கேஜ்ரிவாலின் போராட்டத்தை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார், டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. "ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், 1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை குடியரசு தலைவர் என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தன் டிவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
இப்பதிவிற்கு எதிர்ப்புகள் பல வந்ததாலும், சர்ச்சைக்குள்ளானதாலும், பதிவை சில மணி நேரங்களிலேயே நீக்கி விட்டார் சோம்நாத் பாரதி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.