BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 28 January 2014

சென்னையில் முஸ்லிம்கள் நடத்திய சிறை நிரப்பு போராட்டம்

                                                 


முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை எழும்பூரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி இன்று நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர்.  போராட்டத்தில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டம் அதிகமானதால் லட்சுமி ருக்குமணி சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் எழும்பூரை சுற்றியுள்ள பிறசாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் ஜெய்னூல் ஆபுதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media