திமுக கட்சியின் சொத்து கணக்கில் ஏகப்பட்ட முறைகேடுகள் இருக்கிறது என்றும், அதை பற்றி தான் விரைவில் வெளியிட போவதாகவும் கூறியிருக்கிறார் அழகிரி. மேலும் ஊடகங்களிடம் பேசிய அவர், "திமுக தலைவரை நான் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக, ஸ்டாலினுடன் இருக்கும் தரக்குறைவான ஆட்கள் வதந்திகளை பரப்புகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்மீதும், என் குடும்பத்தை சேர்ந்தோர் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டதா? அவருக்கும், அதிமுகவிற்கும் ரகசிய உடன்பாடுகள் இருக்கின்றது. ஸ்டாலினும் அந்த அம்மாவை விமர்சித்து அல்லது அவருக்கு எதிராக ஏதாவது பேசியிருப்பாரா? என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அழகிரி.
"என்மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் பேராசிரியர், ஸ்டாலின் மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் அழகிரி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.