BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 28 January 2014

அழகிரி உருவ பொம்மைகள் சென்னையில் கொளுத்தப்பட்டது

கருணாநிதி, இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அழகிரி, தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 4 மாதங்களில் இறந்து விடுவார் என்றும், அவரை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், தெரிவித்து இருந்தார். அவருடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை அடுத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகிரி மேல் ஆத்திரம் அடைந்தனர். இன்று சென்னையில் சில இடங்களில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு ஐம்பது பேர், அழகிரியின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். மேலும், அழகிரியை எதிர்த்து அவதூறான வார்த்தைகளில் கோஷம் எழுப்பினர். உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்த போவதாக, முன்னதாகவே ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்த அழகிரி, "கலைஞர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், நாங்கள் எல்லாம் இறந்த பின்பு தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே ஆசை.",  என்றும் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media