BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண்ணை அவரது கணவரே எரித்து கொன்ற கொடூரம்.

அஸ்ஸாமில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண்ணை அவரது கணவரே எரித்து கொன்ற கொடூரம்.



காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், சில நாட்களுக்கு முன் அஸ்ஸாமுக்கு சுற்றுப்பயணம் சென்ற ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் முத்தமிட்டனர், இது அனைத்து பத்திரிக்கை மற்றும் டிவிக்களில் வெளிவந்தது.

ராகுல்காந்தியை முத்தமிட்டது தொடர்பாக போன்டி என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதங்கள் நடந்துள்ளன, இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அந்த பெண் போன்டியை தீவைத்து எரித்தார் அவரது கணவர், மேலும் தனக்கு தானே தீவைத்துக்கொண்டார், இதில் அந்த கணவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் பிழைத்துள்ளார், அந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஆர்வமிகுதியில் சாதாரணமாக ராகுல்காந்திக்கு முத்தமிட்டத்தை அடுத்து அந்த பெண்ணை அவரின் கணவரே எரித்துக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media