அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், நேற்றைய தினம் அமாவாசை என்பதால், சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்து ஆசி பெற்றனர். இதை தொடர்ந்து, வேட்பாளர்களில் ஒரு குழுவினர், மொத்தமாக திருப்பதிக்கு படை எடுத்து சென்றனர்.
இதன் காரணம் என்னவென்று விசாரித்த போது, வேட்பாளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் வர கூடாது, அம்மா மனம் மாறி விடக் கூடாது, வேட்பாளர் பட்டியலிலிருந்து தங்களது பெயர்கள் நீக்க படக் கூடாது, கூட்டணிக் கட்சிக்கு நமது தொகுதியை ஒதுக்கி விடக் கூடாது என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ளவே இந்தப் பயணத்தை மேற்கொண்டனராம் என தெரிய வந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.