BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

தேர்தல் வரை அம்மா திட்டத்தை தடை செய்யலாமா என‌ தேர்தல் ஆணையம் பரிசீலனை


தமிழக‌ முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையிலான பெயரைக் கொண்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ்,  தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் சேவைகள் அவர்களது பகுதிகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல் மற்றும் பிற கோரிக்கைகள் உள்ளிட்ட 33.13 லட்சம் மனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இத்திட்டத்தை, தேர்தல் முடியும் வரை தடை விதிக்கலாமா என்று தேர்தல் ஆணையம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

“இத்திட்டத்தினை வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் கூறும் என்றே தெரிகிறது." என்று வருவாய் துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

தேர்தல் அறிக்கைக்குப் பிறகு, இது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media