BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

கொலையாளியை கண்டுபிடிக்க உதவிய பேசும் கிளி


ஆக்ராவில் உள்ள இந்தி பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர் விஜய் ஷர்மா என்பவரின் மனைவி நீலம் என்பவர், பிப்ரவரி 20ம் தேதி கொலை செய்யப்பட்டு, தனது வீட்டில் பிணமாக கிடந்தார். போலீசார் கொலையாளியை தேடி வந்த நிலையில், ஷர்மாவின் உறவுக்கார பையன் அஷுதோஷ் என்பவர், வீட்டினுள் வரும் போதெல்லாம், நீலம் தன் வீட்டில் வளர்த்த கிளியின் நடத்தையில் வித்தியாசம் இருப்பதை கவனித்து வந்தார் விஜய் ஷர்மா.

அஷூதோஷ் கிளியின் கூண்டை கடக்கும் போதெல்லாம், கிளி பேச பயந்து அமைதி கொண்டிருந்ததாக ஷர்மா கூறினார். சந்தேகத்தின் பெயரில், கிளியிடம் ஒவ்வொரு பெயராக சொல்லி கொண்டே வரும்போது, 'அஷுதோஷ்' என்று கூறிய போது, "உஸ்னே மாரா.. உஸ்னே மாரா (அவன் தான் கொன்றான்)" என்று கிளி கத்தி இருக்கிறது.இது பற்றி, போலீஸிடம் தெரிவித்த போது, அஷுதோஷிடம் விசாரணை நடத்தின‌ர். அவரும், பணத்திற்கு ஆசைப்பட்டு தான் நீலத்தை கொலை செய்ததை போலீசிடம் ஒப்பு கொண்டார்.

இவ்வழக்கில், கொலையாளியை கண்டுபிடிக்க கிளி தான் பேருதவியாக இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media