BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

கணவரால் எரித்து கொல்லப் பட்ட பெண், ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்கிறது அசாம் போலீஸ்


ராகுல் காந்தி அசாம் சென்றிருந்த போது, அவரை முத்தமிட்ட பெண், கணவரால் எரித்து கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்று காலை வெளியாகி இருந்தது. அந்த பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான் என்றும் ஆனால் அவர் ராகுல் காந்தியை முத்தமிடவில்லை மற்றும் அவர் ராகுல் இருந்த இடத்தில் கூட அவர் இல்லை என்றும் அசாம் போலீஸ் தெரிவித்துள்ளனர்.

எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், அவர் கணவருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த தகராறுகள் காரணமாக கூட அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் கணவருக்கும், 40% தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது  என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media