BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 March 2014

திருப்பதி ஏழுமலையானை மொட்டை அடித்து தரிசனம் செய்து விட்டு, மலைப்பாதையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பக்தர்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, மலைக்கு செல்லும் வாகன பாதையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் ஒரு துண்டு சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து போலீஸ் விசாரித்த போது, அதில் அவர் திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ் (வயது 26) என்பது தெரியவந்தது.

இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பிணத்தை மீட்டு திருமலை அஸ்வினி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media