சவுக்கு இணையதளத்தை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு - உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளது சவுக்கு தரப்பு.
சவுக்கு இணையதளத்தை தமிழ் இணைய உலகில் அறியாதவர்களே இருக்க மாட்டார்கள், இதை குழுவாக நடத்தி வருவதாக சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இதை ஆரம்பித்தவர் ஆச்சிமுத்து சங்கர் என்று நம்பப்படுகிறது. சவுக்கு தளம் அரசியல்வாதிகளின் ஊழலை மட்டுமின்றி காவல்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறைகளில் நடக்கும் ஊழல்களையும் அநியாயங்களையும் ஆதாரத்துடன் தட்டி கேட்டு வருகிறது.
சவுக்கு தளத்தின் மிகப்பெரிய சாதனையாக 2ஜி ஊழல் தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட், முன்னாள் முதல்வர் மகள் கனிமொழி கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள் இந்த தளத்தில் தான் முதலில் வெளியிடப்பட்டன.
இந்த தளத்தை முடக்க வேண்டுமென்று நடந்த வழக்கில் சவுக்கு தளத்தினால் தோலுறிக்கப்பட்ட நீதிபதியான சிடி.செல்வமே இதற்கு தீர்ப்பு வழங்கியது வேடிக்கை, இம்மனுவை நீதிபதி சிடி செல்வம் விசாரிக்க கூடாது என்றும் சவுக்கு தளத்தை முடக்க கூடாது என்றும் ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே சாமி ஒரு மனுத்தாக்கல் செய்தார், ஆனால் இம்மனு விசாரணைக்கு நிலுவையில் இருக்கும் போதே சிடி செல்வம் சவுக்கு தளத்தை 10 நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் http://www.tasmactamil.com/ என்ற தளத்திலும் தற்போது சவுக்கு கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன, சவுக்கு தளம் முடக்கப்பட்டால் இது போன்று நூற்றுக்கணக்கான பெயர்களில் தளம் வெளியாகும் என்று சவுக்கு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுக்குக்கு தடைவிதித்த நீதிபதி சிடி செல்வம் பெயரிலேயே http://ctselvam.com/ சவுக்கு மிரர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
சவுக்கு தளம் முடக்கப்படும் செய்தி தற்போது தேசிய ஊடகங்களிலும் வெளிவர ஆரம்பித்துள்ளது, ஏற்கனவே ஆச்சிமுத்து சங்கரை பொய் வழக்கில் கைது செய்து அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து மூன்றாம் தர ட்ரீட்மெண்ட் கொடுத்து அடித்த போலிசால் சில நூறு பேர் மட்டுமே படித்த சவுக்கு தளம் தமிழக அளவில் பிரபலமானது, இந்நிலையில் சவுக்கு தளத்தை முடக்குகிறோம் என்று தமிழக அளவில் பிரபலமான சவுக்கை இந்திய அளவில் பிரபலமாக்கியுள்ளார் நீதிபதி சிடி செல்வம்.
சவுக்கு இணையதளத்தை தமிழ் இணைய உலகில் அறியாதவர்களே இருக்க மாட்டார்கள், இதை குழுவாக நடத்தி வருவதாக சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இதை ஆரம்பித்தவர் ஆச்சிமுத்து சங்கர் என்று நம்பப்படுகிறது. சவுக்கு தளம் அரசியல்வாதிகளின் ஊழலை மட்டுமின்றி காவல்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறைகளில் நடக்கும் ஊழல்களையும் அநியாயங்களையும் ஆதாரத்துடன் தட்டி கேட்டு வருகிறது.
சவுக்கு தளத்தின் மிகப்பெரிய சாதனையாக 2ஜி ஊழல் தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட், முன்னாள் முதல்வர் மகள் கனிமொழி கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள் இந்த தளத்தில் தான் முதலில் வெளியிடப்பட்டன.
இந்த தளத்தை முடக்க வேண்டுமென்று நடந்த வழக்கில் சவுக்கு தளத்தினால் தோலுறிக்கப்பட்ட நீதிபதியான சிடி.செல்வமே இதற்கு தீர்ப்பு வழங்கியது வேடிக்கை, இம்மனுவை நீதிபதி சிடி செல்வம் விசாரிக்க கூடாது என்றும் சவுக்கு தளத்தை முடக்க கூடாது என்றும் ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே சாமி ஒரு மனுத்தாக்கல் செய்தார், ஆனால் இம்மனு விசாரணைக்கு நிலுவையில் இருக்கும் போதே சிடி செல்வம் சவுக்கு தளத்தை 10 நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் http://www.tasmactamil.com/ என்ற தளத்திலும் தற்போது சவுக்கு கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன, சவுக்கு தளம் முடக்கப்பட்டால் இது போன்று நூற்றுக்கணக்கான பெயர்களில் தளம் வெளியாகும் என்று சவுக்கு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுக்குக்கு தடைவிதித்த நீதிபதி சிடி செல்வம் பெயரிலேயே http://ctselvam.com/ சவுக்கு மிரர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.