நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகத்தில் 17 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஆகிய 18 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, திருவள்ளூர், தருமபுரி, புதுச்சேரி, கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வடசென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.