வரவிருக்கும் தேர்தலை ஒட்டி, சிறிய பஸ்களில் உள்ள இலை படங்களை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
"அரசு சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளது இரட்டை இலை சின்னமே அல்ல. இரட்டை இலை சின்னத்தில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். ஆனால் சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் படங்களில் நான்கு இலைகள் உள்ளன. இரட்டை இலை சின்னத்துக்கும், அரசு பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படத்துக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. தேர்தல் ஆணையம் இலைகளை மறைக்க உத்தரவிடும் முன்னர் எங்கள் கட்சியின் கருத்தை கேட்டறியவில்லை. உயர் நீதிமன்றத்தில் நேற்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தபோதுதான் அது பற்றி எங்களுக்கு தெரிய வநத்து. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமையான இலைகள்தான் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருவதற்கு முன்பாகவே சிறிய பஸ்களின் இயக்கம் தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்ட விரோதமானது ஆகும்.
ஆகவே, சிறிய பஸ்களில் வரையப்பட்டிருக்கும் இலைகள் படங்களை மறைக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த தடை விதிப்பதோடு, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்", என்று ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.