BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 March 2014

மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் அழகிரி, எந்தவித பிரச்சினைகளுமின்றி இனிமையாக பணியாற்றினார்: இளங்கோவன்


நேற்று, மு.க.அழகிரி தனது ஆதரவு எம்.பி.க்களுடன் டெல்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருப்ப‌து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் "எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்." என்று, மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். இதனால் மு.க.அழகிரி வேறு கட்சியில் சேர்ந்து திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அழகிரியின் சந்திப்பு குறித்து, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மு.க.அழகிரி, எந்தவித பிரச்சினைகளுமின்றி இனிமையாக பணியாற்றினார். அவர் பிரதமரை சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமான தாகவே நினைக்கிறேன்.மிகப் பெரிய தேசிய கட்சி காங்கிரஸ் கட்சிக்கு அழகிரியை வைத்துத்தான் திமுகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அழகிரி மட்டுமல்ல யாராக இருந்தாலும், காங்கிரஸின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டு, கட்சியில் சேர விரும்பி னால், அவர்களை விருப்பு, வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்கிறோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media