நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டன என கூறினார். "குஜராத்தில் ராம ராஜ்யம் நடப்பதாகவும் ஊழல் அழிந்துவிட்டதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி எந்த தொலைக்காட்சியிலும் செய்தி வரவில்லை. மாறாக மோடி புகழ் பாடுவதற்கு காரணம், நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதே ஆகும்" என கெஜ்ரிவால் ஊடகங்களை குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
மேலும் அவர், ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும், மோடி ஆதரவு ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர். மோடியை முன்னிலைப்படுத்துவதற்கு பாஜகவிடம் இருந்து டிவி சேனல்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் பேசியிருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.