BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 March 2014

50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தூளை, டீத்தூளுடன் கலந்து கடத்திய வாலிபர் கைது


இலங்கையில் இருந்து,  சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய வாலிபர் ஒருவர்,  சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, தங்கம் கடத்தியதற்காக பிடிப்பட்டார். அவர் பெயர் ரவிக்குமார், வயது 34, சென்னை பாலவாக்கம் கோவிந்த் நகரைச் சேர்ந்தவர். அவ‌ரது உடமைகளை சோதனை செய்தபோது 6 டீத் தூள் பாக்கெட்கள் இருந்தன. அவற்றை மெட்டல் டிடெக்டர் கருவியில் வைத்தபோது அலாரம் அடித்தது.

உடனே அதிகாரிகள் ஒரு டீத்தூள் பாக்கெட்டை திறந்து தண்ணீரில் கொட்டினர். அப்போது டீத்தூளுடன் கலக்கப்பட்டிருந்த தங்க துகள்கள் மட்டும் தனியாக பிரிந்து வந்தது. 6 பாக்கெட்களில் மொத்தம் ஒன்றரை கிலோ தங்கப்பொடி இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம்.

இதையடுத்து, ரவிக்குமார் கைது செய்யப்பட்டார்.  போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media