BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 March 2014

20 ஓவர் உலக கோப்பை தொடக்க விழாவில், ரஹ்மான் மற்றும் ஏகான் கலை நிகழ்ச்சி

வருகிற 16ம் தேதி வங்க தேசத்தில் பங்காபந்து மைதானத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷைக்கா ஹசீனா, அவரை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் பங்கு பெறுவதற்கு இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media