BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 14 March 2014

திருவள்ளூரில் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்


பாஜகவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தொகுதிகள் பட்டியல் கிடைத்ததும்,  தே.மு.தி.க. வேட்பாளர்களை இன்று விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவள்ளூரில் மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கிறார். வரும் 27-ந்தேதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று  திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டி (மாலை 3 மணி), வடசென்னை தொகுதி கொளத்தூர் (மாலை 5 மணி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ஆரணி தொகுதி செய்யாறு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த், மாலை 7 மணிக்கு வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் 27-ந்தேதி வரை பல்வேறு பகுதிகளில் முதல் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media