பாஜகவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தொகுதிகள் பட்டியல் கிடைத்ததும், தே.மு.தி.க. வேட்பாளர்களை இன்று விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவள்ளூரில் மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கிறார். வரும் 27-ந்தேதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இன்று திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டி (மாலை 3 மணி), வடசென்னை தொகுதி கொளத்தூர் (மாலை 5 மணி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ஆரணி தொகுதி செய்யாறு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த், மாலை 7 மணிக்கு வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் 27-ந்தேதி வரை பல்வேறு பகுதிகளில் முதல் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.