தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதகையில் நேற்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி தொகுதி வேட்பாளர் மற்றும் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரன ஆ.ராசா பேசியது:
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை 18 முறை வாய்தா வாங்கியுள்ளார். ஆனால் என் மீது போடப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறேன்.
வரும் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராக உள்ளேன். இந்த வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார்.
இந்நிலையில் பாஜக-வில் இருந்து விலகிய மூத்த வழக்கறிஞர் எல்.சந்திரசேகரனுடன் குன்னூர் வட்டார பாஜக நிர்வாகிகள் 50 பேர் ஆ.ராசா முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.