BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 March 2014

ஜெ. மாதிரி 18 வாய்தாக்கள் வாங்க மாட்டேன், 2ஜி வழக்கில் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்- ஆ.ராசா


 தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதகையில் நேற்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி  தொகுதி வேட்பாளர்  மற்றும் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரன ஆ.ராசா பேசியது:

சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல்  தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா இதுவரை 18 முறை வாய்தா வாங்கியுள்ளார். ஆனால் என் மீது போடப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறேன்.

வரும் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராக உள்ளேன். இந்த வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். 

இந்நிலையில் பாஜக-வில் இருந்து விலகிய மூத்த வழக்கறிஞர் எல்.சந்திரசேகரனுடன் குன்னூர் வட்டார பாஜக நிர்வாகிகள் 50 பேர் ஆ.ராசா முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media