மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "நரேந்திர மோடி பிரதமர் ஆக முடியாது. அவர் தனது கட்சிக்குள் சர்வாதிகார வழியில் சென்றுகொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தலைவர்களை வெளியேற்றிவிட்டார். இப்போது, நாடு முழுவதும் அந்த வேலையை செய்யத் தொடங்கியுள்ளார்." என மோடியை சாடி பேசியிருந்தார். மேலும் அவர் பேசுகையில், "பாராளுமன்ற அமைப்பை மதிக்காத மோடியை இறுதியில் நாடு ஓரங்கட்டிவிடும். தேசிய ஜனநாயக கூட்டணிகளுக்கு மோடி தீண்டத்தகாதவராக மாறிவிடுவார்." என்று கூறியுள்ளார்.
வாரணாசியில் கெஜ்ரிவால், மோடி ஆகியோருக்கிடையிலான போட்டி குறித்து கேட்டபோது, அவர்கள் இருவருமே இந்திய ஜனநாயகத்தின் குழப்பவாதிகள் என்று பதிலளித்தார் மொய்லி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.