வாரணாசி மக்கள் விரும்பினால், அத்தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளார் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், அந்தத் தொகுதி மக்களின் கருத்துகளை நேரில் கேட்பதற்காக தமது கட்சித் தலைவர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வாரணாசி சென்றிருந்தார். கங்கை நதியில் நீராடிய கேஜ்ரிவால், காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோயிலுக்குச் சென்றார். அப்போது நூற்றுகணக்கான பாஜகவினர் திரண்டு கேஜ்ரிவாலை எதிர்த்து “துரோகி” என்று கோஷமிட்டனர்.
விஸ்வநாதர் கோயிலில் இருந்து மக்கள் மத்தியில் நடந்து வந்த கேஜ்ரிவால் மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும் மை-யையும் வீசினர். இதனைத் தொடர்ந்து, அங்கு "மோடி... மோடி" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் ஒலித்த போதிலும், அங்கிருந்து புன்னகையுடன் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய் சிங் மற்றும் முன்னாள் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோருடன் வேனில் இருந்தபடி பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.