BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 March 2014

நியாயமான விசாரணைக்கு சீனிவாசன் ராஜினாமா செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பான 'நீதிபதி முகுல் முத்கல் அறிக்கை' மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் பி.சி.சி.ஐ தலைவர் பதவியை சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என நீதிபதி ஏ.கே.பட்நாயக் தெரிவித்தார்.  அப்போது குறிக்கிட்ட சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர் சி.எ.சுந்தரத்திடம், "அறிக்கையை உங்களிடம் அளிக்கிறோம், அதனை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள். சீனிவாசனின் வழக்கறிஞராக இல்லாமல் உங்கள் நிலைப்பாட்டை தெரிவியுங்கள். முதல் அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட விசாரணைக் குழு அளித்தது. இரண்டாவது அறிக்கை முகுல் முத்கல் குழுவின் அறிக்கை. இரண்டு அறிக்கைக்கும் முரண் இருக்கிறது. இதனை வைத்து, அறிக்கையில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?" என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media