நாடாளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கேஜ்ரிவால் இன்று உறுதி செய்தார்.
இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களுக்கு ஹெலிகாப்டரிலேயே வந்துவிட்டு பின்னர் அதிலேயே சென்று விடுகிறார். அவர் மக்களுடன் கலந்து பேசுவது கிடையாது. அவர் மக்களிடம் ஏதோ மறைக்க நினைக்கிறார் என்பது உறுதி. சில மாதங்களுக்கு முன்பு மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறினேன். ஆனால் என்னிடம் இவர்களது கட்சியைப் போன்று பணம் கிடையாது. இத்தேர்தலில் எங்களது கட்சியின் நிதிக்காக இந்நாட்டு மக்களாகிய உங்களிடம் பணம் பெற்று, அப்பணத்திலேயே போட்டியிட நான் விரும்புகிறேன். எனக்கு எம்.பி.யாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. ஊழலுக்கு எதிராக போராடுவதே எங்களது குறிக்கோள். ஆகவே வருகிற தேர்தலில் மோடி போட்டியிடவுள்ள இத்தொகுதியில் அவரை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். மோடியை மட்டுமல்லாது ராகுலையும் வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” என்று தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.