மு.க.அழகிரி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தற்காலிகமாக திமுக வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்தார்.
இதனையடுத்து மு.க.அழகிரி மதுரையில் பேட்டியளித்த போது, “நான் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். எந்தவித முன்னறிவிப்புமின்றி என்னை நீக்கியதற்கும் எனது குற்றச்சாட்டுகளுக்கும் தி்.மு.க. கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். நான் நீக்கப்பட்டதால் நானும் என்னைச் சேர்ந்தவர்களும் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்று அர்த்தம் கிடையாது. மேலும் தி்.மு.க. எங்களுக்கு சொந்தமில்லை என்றும் அர்ததம் கிடையாது. எந்த மாற்றுக் கட்சிக்காரர்களையும் நான் ஆதரிக்கவில்லை. நானும் எனது ஆதரவாளர்களும் என்றும் தி்.மு.க.வை சேர்ந்தவர்களாகத்தான் இருப்போம்” என்று தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.