கடந்த 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மகாத்மா காந்தி கொலைக்கு காரணம் என ராகுல் காந்தி பேசியுள்ளார். இதற்கு பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சனு சுக்லா என்ற வழக்கறிஞர், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ராகுல் காந்தி தொடர்புபடுத்தி பேசியதை கண்டித்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சனு சுக்லா அவரது மனுவில், புலனாய்வு நிறுவனங்களும், கபூர் கமிஷனும் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், ராகுல் காந்தியின் அவதூறான பேச்சால் சங் பரிவார் அமைப்பின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, 12 March 2014
ராகுல் காந்தி மீது புதிய அவதூறு வழக்கு
கடந்த 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மகாத்மா காந்தி கொலைக்கு காரணம் என ராகுல் காந்தி பேசியுள்ளார். இதற்கு பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சனு சுக்லா என்ற வழக்கறிஞர், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ராகுல் காந்தி தொடர்புபடுத்தி பேசியதை கண்டித்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சனு சுக்லா அவரது மனுவில், புலனாய்வு நிறுவனங்களும், கபூர் கமிஷனும் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், ராகுல் காந்தியின் அவதூறான பேச்சால் சங் பரிவார் அமைப்பின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.