நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதனால், மக்கள் மனதில் அதிமுகவிற்கு சாதகமாக மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய அரசின் சிறிய பேருந்துகளில் உள்ள இரட்டை இலை படங்களை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார், திமுக பொதுச் செயலர் மு.க.ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல கேள்விகளை எழுப்பினார், தமிழக முதல்வர் ஜெயலலிதா. நேற்று, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? அல்லது கையுறைகளை போட்டுக் கொண்டு கைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பார்களா?
ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் இருக்கிறது. எனவே மாம்பழம் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் மனு கொடுப்பாரா? இது போன்றது தான் 'இரட்டை இலை' சின்னமும். "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது பழமொழி. இதைப் போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டு அஞ்சும் தி.மு.க-வினருக்கு எதைப் பார்த்தாலும் "இரட்டை இலை" போலவே தெரிகிறது. அதனால்தான் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுக-விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.