ஐ.பி.எல். 2014 போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஜூன்-1 வரை 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட போட்டி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஏப்ரல் 16-ல் தொடங்குகிறது. ஏபரல் 30 வரை நடைபெறும் முதல் கட்ட போட்டியில் மொத்தம் 16 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. மே 16 அன்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்படுவதால், அன்று ஐ.பி.எல். போட்டிகள் ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட போட்டி மே 1-ல் தொடங்கி மே-12 வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஐ.பி.எல். போட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்துவிட்டால், 2-ம் கட்ட போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் அல்லது இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலேயே நடைபெறும் என ஐ.பி.எல். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1-ல் தொடங்கி மே-12 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் போட்டிகளை நடத்திக் கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மே 13-ம் தேதி இந்தியாவில் துவங்கும் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட போட்டிகள் ஜூன் 1-ல் நிறைவுபெறுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.