BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 March 2014

புதுவை தி.மு.க. வேட்பாளர் நாஜீம் மீது வழக்கு


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் புதுவை தொகுதியில், நாஜிம் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் சென்னை சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசிபெற்று நேற்று புதுவை திரும்பினார்.  புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளம் எல்லையில் அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் காரில் அணிவகுத்துவர பேரணியாக அவர் புதுவை அண்ணா சிலைக்கு சென்று மாலை அணிவித்தார். இதில் 16–க்கும் மேற்பட்ட கார்களை நாஜிம் எம்.எல்.ஏ. பயன்படுத்தியதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் துணை தாசில்தார் சிவராஜ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதனை விசாரித்த சப்– இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தேர்தல் விதிகளை மீறியதாக நாஜிம் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடர்ந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media