BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 March 2014

நியூயார்க்கில் பயங்கர வெடிவிபத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 2 பேர் பலி, 17 பேர் படுகாயம்


அமெரிக்காவின் நியூயார்க்கில், கிழக்கு ஹெர்லம் பகுதியின் 116-வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 150 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்ததையடுத்து, அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media