கடந்த ஜனவரி 21-ம் தேதி, வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா உள்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
கருணை மனுக்கள் தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றும், மனு மீது காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டதை காரணம் காட்டி மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல, அது சட்டவிரோதமானது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்பதால் மனுவை இன்று தள்ளுபடி செய்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.