BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 March 2014

ஊழல் வேட்பாளர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறனை எதிர்த்து வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்துவோம்-ஆம் ஆத்மி


தமிழகத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ முதல் வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. திமுக அறிவித்து இருக்கும் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து, தமது வேட்பாளர்களை ஆம் ஆத்மி கண்டிப்பாக போட்டியிட வைக்கும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னையில் கூறியதாவது:

"உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இடிந்தகரையில் இருந்து வெளியே வருவார். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவரை போலீஸார் கைது செய்வார்கள். அப்படி கைது செய்தாலும், அவர் சிறையில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வார். நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் வேட்பாளர்களான ஆ.ராசாவை எதிர்த்து நீலகிரியிலும், தயாநிதி மாறனை எதிர்த்து மத்திய சென்னையிலும் வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்துவோம்."

இவ்வாறு டேவிட் பருண்குமார் தெரிவித்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media