மாயமான மலேசிய விமானத்தை, பல நாடுகள் இணைந்து தேடுதல் பணியை நடத்தி வரும் நிலையில், அந்தமான் கடல் பகுதியையும் உள்ளடக்கி தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவும்படி இந்தியாவிடம் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை கையாளவும், உரிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உரிய நபர்கள் நியமிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாயமான மலேசிய விமானத்தை தேடுவதற்காக விமானப் படையும் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
உரிய உத்தரவு கிடைத்தவுடன், தேடுதல் பணியைத் தொடங்கிவிடுவோம் என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விமானத்தைத் தேடும் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் 40 கப்பல்கள் 34 விமானங்கள் ஈடுபடுகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.