புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்பேத்கார் மற்றும் ராமசாமி படையாட்சி சிலைகள் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்டன. சமீபத்தில் ராமசாமி படையாட்சி சிலை அவமதிப்பை கண்டித்து புதுவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசினார். அதேபோல் அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுவையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் இவர்கள் 2 பேரும் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக எதிர்தரப்பினர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டு, புதுவை போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தனர். இருதரப்பினர் புகார்களையும் போலீசார் பரிசீலனை செய்தனர். அதைத்தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக உள்பட 6 பிரிவுகளில் காடுவெட்டி குரு, திருமாவளவன் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.