BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 5 March 2014

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது: சுஷில் குமார் ஷிண்டே


இந்த ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப்பேட்டி அளித்த அவர், இந்த தகவலை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.  பல்வேறு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் அதிகமான மத்திய போலீஸ் உள்ளிட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநிலங்களுக்கு பாதுகாப்பு படைகளை அனுப்பும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று  உள்துறை மந்திரி ஷிண்டே அறிவித்து இருக்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media