BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 5 March 2014

சென்னையில் பாஜகவின் 'ஒரு நோட்டு.. ஒரு ஓட்டு' பிரச்சாரம்


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘மோடி ஃபார் பி.எம் ஃபண்ட்’ என்னும் வித்தியாசமான பிரச்சாரத்தை,  பாஜக மேற்கொண்டு வருகிறது. இதை தமிழக பாஜகவினர் ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ என பெயரிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நேற்று தேனாம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்தத் திட்டத்தின்படி வாக்காளர்கள் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை கொடுத்தால் அதற்கு பதிலாக பிரச்சாரக் குழு சார்பில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்ட கூப்பன் கொடுக்கப்படும். தேனாம்பேட்டையில் நடந்த ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ பிரச்சாரத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media