BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, தமிழகம் முழுக்க 30,000 ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட 5,360 நடமாடும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்தக் குழுவினர் வரும் 20-ம் தேதியில் இருந்து தங்களது பணிகளைத் தொடங்குவர் என்றும் தெரிவித்தார்.

பிரவீண் குமார் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்முறையாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம், ‘கண்டிப்பாக வாக்களியுங்கள்’ என்றும், வாக்குப்பதிவு தினத்தன்று காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு, ‘வாக்களித்து விட்டீர்களா’ என்றும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உள்ளோம். எங்களிடம் உள்ள 60 லட்சம் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு இந்த நினைவூட்டல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதுதவிர, எப்.எம். ரேடியோ மற்றும் தனியார் தொலைக் காட்சிகளிலும் ‘வாக்களித்து விட்டீர்களா’ என்ற நினைவூட்டல் விளம்பரங்களை ஒலி, ஒளிபரப்ப அனுமதி கேட்க இருக்கிறோம்.

தேர்தல் நாளன்று ஊழியர் களுக்கு விடுமுறை தரவேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி, விடுப்பு தர மறுக்கும் நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். விடுப்பு தராத நிறுவனம் குறித்து ஊழியர்கள், எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு (1950) புகார் அளிக்கலாம்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media