கன்னியாக்குமரியில் நேற்று நடைப்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எத்தனையோ வளர்ச்சித் திட்டங் களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழே இருந்து மீட்டுள்ளோம்.
தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், ‘இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை’ என்கின்றனர். இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் கட்சியை விட நன்மை செய்தவர்கள் இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சாலை, புதிய பள்ளிக்கூடங்கள், அரசியல் தீர்வு ஆகியவற்றை பெற காங்கிரஸ் அரசுதான் வழிவகை செய்துள்ளது. ஜனவரி 2-ம் தேதி இலங்கை, தமிழக மீனவர்களை சந்திக்க வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கே சாரும். ஆனால், அதற்கு இடம் அனுமதி கொடுப்பதற்கு அதிமுக அரசு காலதாமதம் செய்தது.
பாஜக தனி நபர் கையில் சிக்கி இருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினையையும் தன்னால் தீர்க்க முடியும்’ என்று அவர் சொல்லி வருகிறார். அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். தனி நபர் கையில் அதிகாரம் செல்லக் கூடாது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை, மீனவர்களுக்கு பாதுகாப்பு, கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல் ஆகியவை நிறைவேற்றப்படும். இளமையான, வலிமையான அரசு அமைய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எத்தனையோ வளர்ச்சித் திட்டங் களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி மக்களை வறுமை கோட்டுக்கு கீழே இருந்து மீட்டுள்ளோம்.
தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், ‘இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை’ என்கின்றனர். இலங்கைத் தமிழருக்கு காங்கிரஸ் கட்சியை விட நன்மை செய்தவர்கள் இந்தியாவில் யார் இருக்கிறார்கள்? இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சாலை, புதிய பள்ளிக்கூடங்கள், அரசியல் தீர்வு ஆகியவற்றை பெற காங்கிரஸ் அரசுதான் வழிவகை செய்துள்ளது. ஜனவரி 2-ம் தேதி இலங்கை, தமிழக மீனவர்களை சந்திக்க வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கே சாரும். ஆனால், அதற்கு இடம் அனுமதி கொடுப்பதற்கு அதிமுக அரசு காலதாமதம் செய்தது.
பாஜக தனி நபர் கையில் சிக்கி இருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினையையும் தன்னால் தீர்க்க முடியும்’ என்று அவர் சொல்லி வருகிறார். அவரிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். தனி நபர் கையில் அதிகாரம் செல்லக் கூடாது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை, மீனவர்களுக்கு பாதுகாப்பு, கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல் ஆகியவை நிறைவேற்றப்படும். இளமையான, வலிமையான அரசு அமைய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.