BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

அரசியல் ரீதியாக விமர்சித்துக் கொண்டாலும், தமிழக முதல்வருடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு உள்ளது: மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மோடி, ஏ.என்.ஐ. டெலிவிஷன் நெட்வொர்க்-குக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பொறுத்தவரையில் அரசியலில் விரோதியோ, தீண்டத்தகாதோரோ யாருமில்லை என்று குறிப்பிட்டார். மோடி சென்னை வந்த அதே நாளில், அவரை விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தாரே என்ற கேள்விக்கு, "நாங்கள் அரசியலில் கொள்கை ரீதியில் வேறுபட்டு ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில், எனக்கு அவருடனான நல்லுறவு மிகச் சிறப்பாகவே உள்ளது" என்றார்.

அரசியல் ரீதியில் எதிர் துருவமான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன்கூட தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பேணுவதாக குறிப்பிட்ட அவர், "நாங்கள் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டிருக்கிறேன். இதுதான் நமது ஜனநாயகத்தின் மேன்மை" என்றார்.

நீங்கள் பிரதமாரானால் ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்வீர்களா? என்று வேறொரு தொலைகாட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கேட்கப்பட்டதற்கு, "எந்த ஓர் அரசும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுப்படவே கூடாது. சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும்" என்று பதிலளித்தார் மோடி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media