BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 May 2014

பாபா ராம்தேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு - பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்.



தலித் மக்களின் வீடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது போல் ராகுல் காந்தி சென்று வருகிறார் என சர்ச்சைக்குரிய கருத்தை யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து  நாடு முழுவதும் உள்ள தலித் மக்களிடம் பலத்த அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர் மீது தீண்டாமை வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோசியர்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான பகவான் சிங் சோஹன், ராம்தேவின் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக ஹோசியர்பூர் பேருந்து நிலையத்தில் ராம்தேவின் உருவ பொம்மையை அவர் தீ வைத்து எரித்ததுடன், அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார். ராம்தேவை பற்றிய தனது முடிவில் தான் உறுதியாக உள்ளதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தலித் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ராம்தேவ் பேசும்போது தான் பேசுவதில் என்ன தவறு என அவர் கேள்வியெழுப்பினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media